சரிடா சூர்யா நான் நேற்று அம்மையின் பல பெயர்களை ஒரு துதிப் பாடலில் பார்த்துக் கொண்டிருந்தேன். அவற்றைக் குறித்தும் வைத்து உள்ளேன். உனக்காக அதை தருகிறேன். படித்து கோவிலுக்குப் போகும் போதும் வீட்டில் இறைவனைக் கும்பிடும் போதும் சொல்லிப் பார்.
"மருவத்தூர் ஓம் சக்தி, மகமாயி கருமாரி
உறையூரு வெக்காளி, உஜ்ஜயினி மாகாளி
கொல்லூரு மூகாம்பா, கேதாரம் ஸ்ரீ கௌரி
மாயவரம் அபயாம்பிகா.
மதுரை நகர் மீனாட்சி, காஞ்சீபுரம் காமாட்சி
காசி விசாலாக்ஷி, திருக்கடவூர் அபிராமி
சிதம்பரத்து சிவகாமி, ஸ்ருங்கேரி சாரதாம்பா
திருவாரூர் கமலாம்பிகா
நாகாம்பா, யோகாம்பா, லலிதாம்பா, ஜெகதாம்பா
பாலாம்பா, நீலாம்பா, கனகாம்பா, சௌடாம்பா
சிவகாளி, நவகாளி, திருசூலி, சுபநீலி
ஸ்ரீதேவி, பூதேவி, ஜயதேவி, மலையரசி
அம்மாயி, பொம்மாயி, அன்பாயி, குழுமாயி
பொன்னாயி, பூவாயி, வேலாயி, வீராயி
ஆரல்வாய் இசக்கி அம்மா,வாடீ! ஆரணி படவேட்டம்மா!
திருவாங்கூர் மேகவல்லி, தாயி!
திருக்கூடல் மதுரவல்லி!
புதுக்கோட்டை புவனேஸ்வரி
நங்கநல்லூர் ராஜேஸ்வரி
மண்ணடியில் மல்லீஸ்வரி
மாதேஸ்வரம் மாதேஸ்வரி
அலங்காரக் கல்யாணி
நாமக்கல் அரசாணி
அங்காளி, செங்காளி
சந்தோஷி மாதா.
மயிலாப்பூர் கற்பகமே
மலைக்கோட்டை செண்பகமே
செல்லாயி, சிலம்பாயி, கண்ணாத்தா வா வா !கஞ்சனூர் வனதுர்கா
மாவூரு ஸ்ரீகாளி
கைலாசப் பார்வதி
மைசூரு சாமுண்டி
வலங்கைமான் திருமாரி
வழி காட்டும் திருப்பாச்சி
உமையாம்பா, தேனாம்பா
மலையம்மா, வேலம்மா
திருவத்தூர் வடிவுடையாள்
காளாஸ்தி ஞானாம்பா
மகராசியே! எங்கள் பாளையத்தம்மா !
விராலிமலை வேக்கண்ணாள்
முக்கூடல் பாவாயி
காரைக்குடியம்மா
பொற்கூடையம்மா !
ஸ்ரீசக்தி ஜய சக்தி
சிவசக்தி நவசக்தி
பாஞ்சாலி, ராக்காயி
பைரவி, சாம்பவி
திருவானைக்கா ஆளும் அகிலாண்ட ஈஸ்வரி
ஓம் சக்தி, ஓம் சக்தி
மருவத்தூர் ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம் சக்தி
உலகாளும் ஓம் சக்தி
வா சக்தி வா சக்தி
வா சக்தி வா சக்தி
உயிர் காக்க வா சக்தி !"
உறையூரு வெக்காளி, உஜ்ஜயினி மாகாளி
கொல்லூரு மூகாம்பா, கேதாரம் ஸ்ரீ கௌரி
மாயவரம் அபயாம்பிகா.
மதுரை நகர் மீனாட்சி, காஞ்சீபுரம் காமாட்சி
காசி விசாலாக்ஷி, திருக்கடவூர் அபிராமி
சிதம்பரத்து சிவகாமி, ஸ்ருங்கேரி சாரதாம்பா
திருவாரூர் கமலாம்பிகா
நாகாம்பா, யோகாம்பா, லலிதாம்பா, ஜெகதாம்பா
பாலாம்பா, நீலாம்பா, கனகாம்பா, சௌடாம்பா
சிவகாளி, நவகாளி, திருசூலி, சுபநீலி
ஸ்ரீதேவி, பூதேவி, ஜயதேவி, மலையரசி
அம்மாயி, பொம்மாயி, அன்பாயி, குழுமாயி
பொன்னாயி, பூவாயி, வேலாயி, வீராயி
ஆரல்வாய் இசக்கி அம்மா,வாடீ! ஆரணி படவேட்டம்மா!
திருவாங்கூர் மேகவல்லி, தாயி!
திருக்கூடல் மதுரவல்லி!
புதுக்கோட்டை புவனேஸ்வரி
நங்கநல்லூர் ராஜேஸ்வரி
மண்ணடியில் மல்லீஸ்வரி
மாதேஸ்வரம் மாதேஸ்வரி
அலங்காரக் கல்யாணி
நாமக்கல் அரசாணி
அங்காளி, செங்காளி
சந்தோஷி மாதா.
மயிலாப்பூர் கற்பகமே
மலைக்கோட்டை செண்பகமே
செல்லாயி, சிலம்பாயி, கண்ணாத்தா வா வா !கஞ்சனூர் வனதுர்கா
மாவூரு ஸ்ரீகாளி
கைலாசப் பார்வதி
மைசூரு சாமுண்டி
வலங்கைமான் திருமாரி
வழி காட்டும் திருப்பாச்சி
உமையாம்பா, தேனாம்பா
மலையம்மா, வேலம்மா
திருவத்தூர் வடிவுடையாள்
காளாஸ்தி ஞானாம்பா
மகராசியே! எங்கள் பாளையத்தம்மா !
விராலிமலை வேக்கண்ணாள்
முக்கூடல் பாவாயி
காரைக்குடியம்மா
பொற்கூடையம்மா !
ஸ்ரீசக்தி ஜய சக்தி
சிவசக்தி நவசக்தி
பாஞ்சாலி, ராக்காயி
பைரவி, சாம்பவி
திருவானைக்கா ஆளும் அகிலாண்ட ஈஸ்வரி
ஓம் சக்தி, ஓம் சக்தி
மருவத்தூர் ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம் சக்தி
உலகாளும் ஓம் சக்தி
வா சக்தி வா சக்தி
வா சக்தி வா சக்தி
உயிர் காக்க வா சக்தி !"
சரிங்க தாத்தா நான் அம்மாவை அம்மா என்று அழைக்கிறேன். நீங்கள் உங்கள் அம்மாவை அம்பா என்று அழைத்தீர்கள். அம்பா என்று அம்மாவை அழைக்கலாமா?
டேய் ஒரு சினிமாப் பாட்டிலே கூட அம்மாவை அம்பா என்று கூறி அழைத்த பாடல் இருக்கிறது. சொல்கிறேன் கேள்.
அம்பா மனம் கனிந்து உனது கடைக் கண்பார்
திருவடி இணை துணை என்
(அம்பா)
வெம்பவ நோய் அற அன்பர் தமக்கு அருள்
கதம்ப வனக்குயிலே - சங்கரி ஜகதம்பா
(அம்பா)
பைந்தமிழ் மலர்ப் பாமாலை சூடி உன்
பாதமலர்ப் பணிந்து பாடவும் வேண்டும்
சிந்தையும் என் நாவும் எந்நேரமும் நின்
திருப்பெயர் புகழ் மறவாமையும் வேண்டும்
பந்த உலகில் மதி மயங்கி அறு பகைவர்
வசமாய் அழியாமல் அருள்பெற வேண்டும்
இந்த வரம் தருவாய் ஜகதீஸ்வரி
எந்தன் அன்னையே அகிலாண்ட நாயகி
(அம்பா)
திருவடி இணை துணை என்
(அம்பா)
வெம்பவ நோய் அற அன்பர் தமக்கு அருள்
கதம்ப வனக்குயிலே - சங்கரி ஜகதம்பா
(அம்பா)
பைந்தமிழ் மலர்ப் பாமாலை சூடி உன்
பாதமலர்ப் பணிந்து பாடவும் வேண்டும்
சிந்தையும் என் நாவும் எந்நேரமும் நின்
திருப்பெயர் புகழ் மறவாமையும் வேண்டும்
பந்த உலகில் மதி மயங்கி அறு பகைவர்
வசமாய் அழியாமல் அருள்பெற வேண்டும்
இந்த வரம் தருவாய் ஜகதீஸ்வரி
எந்தன் அன்னையே அகிலாண்ட நாயகி
(அம்பா)
தாத்தா இது எந்த படம் தாத்தா? இது சிவகவி என்னும் திரைபடத்தில் வந்தது. தியாகராஜா பாகவதர் பாடினார். தேன் போல தித்திக்கும் பாடலட இது.
No comments:
Post a Comment