உடலில் படும் ஊமைக் காயத்தை ஆற்ற வேது கொடுக்கிறோம்
வேது என்றால் தெரியவில்லையா? நாம் தமிழர் ஆயிற்றே? ஆங்கிலத்தில் சொன்னால் தானே புரியும். CHEMISTRY - வேதியல் இப்போது புரிகிறதா? உள்ளத்தில் படும் ஊமைக் காயத்தை ஆற்ற இறைவன் பெயரைச் சொல்லிக்கொள்கிறோம்.
இறைவன் பெயர் உள்ளத்துக்கு வேது
இந்த வேதுதான் வேதம்
வேதம் என்னும் தூய தமிழ்ச்சொல்லை ஆரியம் என்பது விந்தை
இறைவன் பெயர் உள்ளத்துக்கு வேது
இந்த வேதுதான் வேதம்
வேதம் என்னும் தூய தமிழ்ச்சொல்லை ஆரியம் என்பது விந்தை
குழந்தைகளே நான் சொல்லவில்லை இதை. பொதுவன் அடிகள் என்று ஒரு தமிழில் புலமை வாய்ந்த ஒருவர் சொல்லி இருக்கிறார்.
இதற்கென்றே அவர் ஒரு வலைத் தளம் வைத்து தமிழில் உள்ள சொற்கள் எப்படி நாம் பயன்படுத்தாமல் விட்டதால் வடநாட்டவர் பயன்படுத்தி அவர்கள் மொழியை வளம் ஆக்குகிறார்கள் என்று விளக்குகிறார். குழந்தைகளே இறைவனை - கடவுளை மறக்க வேண்டாம். எப்போதும் துதி பாடுங்கள். வடமொழியில் சுலோகங்கள் என்று சொல்ல வேண்டாம். தமிழில் - தேவாரம், திருவாசகம், நாலாயிர திவ்ய பிரபந்தம் இன்னும் எராளமான துதிப் பாடல்கள் உள்ளன. பாடுங்கள். இல்லையா? இசைத்தட்டுகளில் TMS சீர்காழி கோவிந்தராஜன் போன்றோர் பாடிய அழகிய தமிழ் பாடல்கள் உள்ளன. பாடுங்கள்.
உதாரணமாக
முருகா ... முருகா ...
அழகென்ற சொல்லுக்கு முருகா (2)
உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா
அழகென்ற சொல்லுக்கு முருகா
உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா
(அழகென்ற சொல்லுக்கு முருகா)
சுடராக வந்தவேல் முருகா
கொடும் சூரரை போரிலே வென்றவேல் முருகா (2)
கனிக்காக மனம் நொந்த முருகா (2)
முக்கனியான தமிழ்தந்த செல்வமே முருகா
(அழகென்ற ... )
அழகென்ற சொல்லுக்கு முருகா (2)
உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா
அழகென்ற சொல்லுக்கு முருகா
உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா
(அழகென்ற சொல்லுக்கு முருகா)
சுடராக வந்தவேல் முருகா
கொடும் சூரரை போரிலே வென்றவேல் முருகா (2)
கனிக்காக மனம் நொந்த முருகா (2)
முக்கனியான தமிழ்தந்த செல்வமே முருகா
(அழகென்ற ... )
தமிழ் தந்த தெய்வம் முருகன். தமிழில் அவனைப் பாடுங்கள். மகிழ்ச்சி பொங்கும்.
"சரிங்க தாத்தா. கதைக்கு வாங்க. சீதையை கடலிலே விட்டு விட்டார்கள். குழந்தை என்ன ஆனது தாத்தா? " கேட்டால் ஹரிணி. சரிம்மா இப்போ காட்சி மாறுகிறது. நாம் மிதிலை என்ற நாட்டுக்குப் போகிறோம். சரியா ? எல்லோரும் தலையை ஆட்டினார்கள். மிதிலையிலே ஒரே பஞ்சம். வரலாறு காணாத பஞ்சம். ராஜா ஜனகன் ஒரு முனிவர் மாதிரி. அவரை ராஜா ரிஷி என்று கூட சொல்றாங்க. அவர் ஆண்டவனை வேண்டினார். வேள்விகள் நடத்தினார்.
"தாத்தா வேள்வி என்றால் என்ன தாத்தா?" கேட்டாள் ஐசு. சூரியா சொன்னான் "வேள்வி என்றால் தமிழில் யாகம் என்று பொருள். யாகம் என்பது வடசொல். அதனால் தாத்தா வேள்வி என்று நம்மிடம் சொல்கிறார். சரிதானே தாத்தா" . ஆமாம் தமிழில் நல்ல சொற்கள் இருக்கும் போது பிற மொழி சொற்களைச் சொல்லக்கூடாது. இதைத் தான் "கனி இருப்பக் காய் கவர்ந்தற்று" என்று வள்ளுவர் சொல்கிறார். பழம் இருக்கிறப்போ கையைப் போய் யாராவது சப்பிடுவங்கள? சரி. கதைக்கு வருவோம். ஜனகர் பூமியை உழுதார். ராஜா என்றாலும் நல்ல முன்மாதிரியாக இருந்து ஏறிப் பூட்டி அவரே நிலத்தை உழுதார். மன்னன் எப்படியோ அப்படித் தானே மக்களும். எனவே அவர் உழும் தொழிலைத் தானே செய்தார். நான் ராஜா. நான் போய் உழலாமா என்று எல்லாம் அவர் கேக்கல்லே. ராஜா என்றால் யார் தெரியுமா? "தெரியும் தாத்தா, ராஜா என்றால் மன்னன். நாட்டை அரசாள்பவன் மன்னன். அரசன் என்று கூட சொல்லலாம்." என்றான் சூரியா. உழுத போது ஏரில் ஒரு பொருள் தட்டியது. எல்லோரும் ஓடி வந்தார்கள் ஓசையைக் கேட்டு. அங்கே கண்டார்கள் ஒரு பெட்டியை. பெட்டிக்குள்ளே ஒரு பொண்ணு. வைர வைடூரியங்கள் இருந்தன. அரசன் அந்த பெட்டியை எடுத்தான். குழந்தையை எடுத்துக் கொஞ்சினான். அந்த குழந்தைக்கு சீதை என்று பெயர் இட்டான். மிதிலையில் கிடைத்த குழந்தை என்பதால் மக்கள் மைதிலி என்று செல்லம் கொண்டாடினார்கள். "தாத்தா இலங்கையில் நீரில் விட்ட குழந்தை மிதிலையில் பூமியில் கிடைத்தது எப்படி தாத்தா" நம்ப முடியவில்லையே என்றான் சூரியா. டேய், நான் சொல்றது கடவுள் கதை. கதை என்றால் இப்படித் தான் இருக்கும். திரைப்படத்தில் மாடி விட்டு மாடி தாவுகிறார்கள். ஒருத்தன் நூறு பேரை அடிக்கிறான். இரசிக்கிறீர்கள். ஏற்றுக் கொள்கிறீர்கள். கை தட்டுகிறீர்கள். வாயொலி எழுப்புகிறீர்கள். ஆமாண்டா. விசில் அடிக்கிறீர்கள். அது மாதிரி தான் இதுவும். கேள்வி கேட்கக்கூடாது. தெய்வக் குத்தம் ஆயிடும். சரியா?
திருமகளே மிதிலையில் பிறந்த பிறகு செல்வம் கொட்டியது அந்த ஊரில். "ஏங்க தாத்தா நம்ம ஊரிலும் வரலாமில்லே அந்த திருமகள். இங்கேயும் செல்வம் கொட்டுமில்லே?" என்றால் ஐசு. அது தான் நீ வந்து இருக்கிறீயே அதுவே போதுமடி என்றார் தாத்தா. "சரிங்க தாத்தா - சீதை வந்தாச்சு. இவங்களைக் கட்டிக்க இராமர் வரணுமே?" . "ஆமாம் வந்து விட்டார். நாளைக்குச் சொல்கிறேன். சாமி மேலே ஒரு பாட்டு பாடிட்டு எல்லோரும் படுங்க" என்றார் தாத்தா. நாளைக்கு சொல்றேன் அந்தக் கதையை.
No comments:
Post a Comment